Search This Blog

Friday 26 August 2011


வாழ்வியல் நுட்பங்கள்
மூன்றும் பெற்றால் பெருவாழ்வு
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

என் இனிய நண்பர்களே! செழிப்பான, நிம்மதியான, அமைதியான, ஆனந்தமான வாழ்கைக்கு மூன்று முக்கியமான அம்சங்கள் தேவைப்படுகிறது. அந்த மூன்றையும் பெற்றால் பெருவாழ்வு அமையும். அவை முறையே, பணம், நேரம் மற்றும் வருமான பாதுகாப்பு. நம்மில், வெறும் மூன்று சதவிகிதத்தினர்தான் இந்த மூன்றையும் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். மற்ற 97 சதவிகித்த்தினர் ஒன்று அல்லது இரண்டையோ அல்லது மூன்றையுமே இழந்துதான் வாழ்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், மெஜாரிட்டி எப்போழுதும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லைதானே?. ஏன் என்றால் இந்த மூன்று சதத்தினர்தான் உலகம் மேம்படக் காரணமாக இருக்கிறார்கள். சரி, அந்த மூன்று சதத்தினர் அனுபவிக்கும் அந்த மூன்றையும் ஒன்றாகப் பெறுவது எப்படி என்று பார்ப்போமா?. அது பற்றித் தெரிந்து கொள்ளும் முன், நம் 97சதத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.


வருமான வழி
பணம்
வாழ நேரம்
வருமான பாதுகாப்பு
1. வேலை
(80%)
எவ்வளவுதான் சம்பளம் உயர்ந்தாலும் விலைவாசி அதைத் தாண்டியே இருப்பதால் பணப்பற்றாக்குறை இருக்கவே செய்யும்.
பணம் இல்லாவிட்டாலும் உபரி நேரம் அதிகம் இருக்கும். அதுகூட இல்லாதவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
நாம் பார்க்கும் வேலைக்கு வேண்டுமானால் பாதுகாப்பு இருக்கலாம், ஆனால், வருமான பாதுகாப்பு கிடையாது. நம்மால் வேலை செய்ய முடியாவிட்டால் வருமானம் இல்லை.
பணம் இல்லை
நேரம் உண்டு
பாதுகாப்பு இல்லை.
2. பெருந் தொழில்
(15%)
பெரும் பணம் கையில் புரளும், ஆனால், அதில் கடன் போக எவ்வளவு பணம் சொந்தப் பணம் என்பதுதான் முக்கியம்.
தொழில் போட்டியும், பெரும் பணம் முதலீட்டாக போட்டுள்ளதாலும் முழு நேரமும் தொழில் பற்றிய கவனமே அதிகம் இருக்கும். ஆகையால் வாழ்வதற்கு நேரம் இல்லை.
எவ்வளவு நல்ல வருமானத்தை எட்டியிருந்தாலும், இந்த நிலை அப்படியே நிலைக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. வர்த்தக நிலமையோ அல்லது வர்தகர் நிலமையோ பாதகமானால் வருமானம் பாதிக்கும்.
பணம் உண்டு
நேரம் இல்லை
பாதுகாப்பு இல்லை
3. சுய தொழில்
(7%)
சுய திறமையின் பலனாய் சுய தொழில் பார்க்கும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்டவர்களுக்கு பணம் நிறைய கொட்டும்தானே? .
பெரும் தொழில் செய்பவர்களைவிட சுய தொழில் புரிபவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. காரணம், தொழில் முழுமையாக அவரை மட்டுமேச் சார்ந்து இருப்பதால்தான்.
தனக்கோ தன் சுய திறமைக்கோ பங்கம் வந்தால் வருமானம் நின்றுவிடும். உதாரணமாக, அறுவை சிகிச்சை நிபுணர்க்கு விபத்தில் விரல் போனால், அவரின் வருமானம் நின்றுவிடும்தானே?.
பணம் உண்டு
நேரம் இல்லை
பாதுகாப்பு இல்லை

என்ன நண்பர்களே! இந்த மூன்று வகையான நபர்களுக்கும் மூன்றில் ஒன்றுதான் கிடைக்கிறது என்பது புரிகிறதா?. ஆக, இந்த மூன்றும் கிடைக்கும் நபர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?. அவர்கள் வேறு யாரும் இல்லை, தலைமுறை வருமானம் (Royalty Income) பெறுபவர்கள்தான். ராயல்டி என்பது ஒரு முறை செய்த செயலுக்குத் தலைமுறைக்கும் வருமானம் பெறுவதாகும். இதற்கு, நீங்கள் ஏதேனும் புதிதாக கண்டுபிடிக்க வேண்டும், அல்லது நீங்கள் ஒரு பாடகராகவோ, இசை அமைப்பவராகவோ, புத்தகம் எழுதுபவராகவோ இருந்து, உங்கள் படைப்பு பலரால் விரும்பி வாங்கப்படுமானால் உங்களுக்கு ராயல்டி கிடைக்கும். இதற்கெல்லாம் சாத்தியம் இல்லை என்றால் வலைப் பின்னல் வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றால் உங்களுக்கும் இராயல்டி கிடைக்கும். ஆக, இப்படி ராயல்டி பெறும் வருமானத்தில்தான் வாழ்வதற்கு தேவையான பணம்,வாழ நேரம் மற்றும் வருமான பாதுகாப்பும் கிடைக்கிறது. அதன் விளக்கத்தை இப்பொழுது பார்ப்போமா?.

வருமான வழி
பணம்
வாழ நேரம்
வருமான பாதுகாப்பு
வலை பின்னல் வியாபாரம்
நமது குழுவில் ஐநூறு பேர் இருக்கும் போது, ஒவ்வொருவரும் சுமார் ஆயிரம் ருபாய்க்கு தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதாக வைத்துக் கொண்டால் கூட நமக்கு ஐந்பதாயிரமாவது கிடைக்கும்.
நமக்கான வலை பின்னல் வியாபாரத்தை ஏற்படுத்திவிட்டால், நம் முனைப்பையும் தாண்டி வளர்ந்து கொண்டே போவதால், நாம் உழைக்கும் நேரம் மிச்சம் ஆகிறது ஆகையால் நமக்கு வாழ நேரம் கிடைக்கிறது.
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் பொருட்களின் (Fast Moving Consumer Goods - FMCG) உபயோகத்தைச் சார்ந்தும், குழுவின் பலம் சார்ந்தும் இருப்பதால் தலைமுறைக்கும் வருமானம் நிலைத்துப் பெருகும்.
பணம் உண்டு
நேரம் உண்டு
பாதுகாப்பு உண்டு
வலைப் பின்னல் வியாபாரம் மூலம் வாழப் போதுமான பணமும்,
குடும்பத்தோடு வாழ நேரமும், வருமான பாதுகாப்பும் கிடைக்கும்.

விலைவாசியை வென்று வாழ்வோம்


வாழ்வியல் நுட்பங்கள்
விலைவாசியை வென்று வாழ்வோம்
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

வாழ்கை போராட்ட கள வீரர்களே! போராட்டம்தான் வாழ்க்கை என்று நமக்கெல்லாம் கற்பிக்கபட்டுள்ளதால் அதனோடு மல்லுக்கு நிற்பதே வேலையாகிப் போச்சு. மல்லுக்கு நின்று வெற்றி பெற்ற ஒன்றையாவது நம் வாழ்க்கையில் இதுவரைக் கண்டோமா என்று கவனித்தோமானால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சும். ஆக, மல்லுக்கு நிற்பதை விட்டு, சமயோசிதமாக வாழ்கையை கையாண்டால் வெற்றி கொள்வோம். வாழ்க்கை போலவே, நம் வாழ்க்கை களத்தில் நமக்கு சவாலாக இருப்பது விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வுக்காக கவலைப்பட்டாலும், போராட்டம் நடத்தினாலும் விலைகள் குறையப் போவதில்லை. நிதியமைச்சரே ஆணையிட்டாலும், சர்வதேச நிதி நிறுவனமே தலையிட்டாலும் குறையப் போவதில்லை. அது அவர்களின் கைகளில் நிச்சயமாக இல்லை. பின் நாம் எப்படித்தான் சமாளிப்பதாம். பார்த்தீர்களா? நான் உங்களை போராடவோ, சமாளிக்கவோ சொல்லவில்லை. சமயோசிதமாகக் கையாளச் சொல்கிறேன். அது பற்றி இங்கு பார்ப்போமா?.

இனிய இல்லத்தரசிகளே!, உங்கள் வீட்டு மளிகைச் செலவுக்கு, ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக வைத்துக் கொள்வோம். அதே மளிகைப் பட்டியலை அடுத்த மாதம் அதே கடையில் வாங்கப்போனால் விலை எவ்வளவு கூடும் தோராயமாகச் சொல்ல முடியுமா?. சுமார், ஐம்பது ரூபாய் ஏறுவதாக வைத்துக் கொள்வோம். ஆக, ஆறு மாதம் ஆனால் ரூ 1300ம், ஒரு வருடம் கழித்து ரூ 1600மாக இருக்கும். ஆக, மாதம் மளிகைக்கு ரூ 1000 செலவு செய்யும் போது, நாம் வீட்டிற்கு ரூ 10,000 கொண்டு வருவதாக வைத்துக் கொள்வோம் (மளிகை செலவு போல் நமக்கு பத்து செலவுகள் காத்திருக்கின்றன). அப்படி பார்க்கும் போது, விலை உயர உயர அதற்கு தக்கபடி




சம்பளத்தையா உயர்த்துகிறார்கள்?. எவ்வளவுதான் சம்பளம் உயர்த்தினாலும் விலைவாசி அதையும் தாண்டியதாகத்தான் எப்போதும் இருக்கும். நாமும், அடுத்த சம்பள உயர்வு வந்தால் சமாளித்து விடலாம் என்று காத்திருந்து காத்திருந்து விலைவாசியிடம் ஏமாந்துதான் போகிறோம். இதற்கு விடிவே இல்லையா?. இனிய நண்பர்களே!, தொற்று நோய் கிருமியை அழிக்க முடியாது, ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். அது போலவே, விலைவாசி உயர்வை ஒழிக்க முடியாது, ஆனால் அது நம்மை பாதிக்காமல் இருக்க தடுப்பு உத்திகளை கையாள முடியும். அந்த தடுப்பூசிதான் வலை பின்னல் வியாபாரம். அது பற்றி இனி பார்ப்போம்.

நாம் சந்திக்கும் உலகம்
(Conventional Marketing)
வலை பின்னல் வர்த்தக உலகம்
(Network Marketing)
1. விலை உயர்வு முழுமையும் நம் தலையில்: ஒரு பொருள் ரூ. 100க்கு விற்றது, கடும் விலைவாசியால் ரூ. 200ஆக விற்குமானால், அதிகப்படியான ரூ. 100ஐ நாம்தான் கொடுக்க வேண்டும்.
1. விலை உயர்வால் பாதிப்பு குறைவு: அதுவே, இந்த வர்தகத்தில், ரூ. 100ஆக விற்கும் போது ரூ. 80யும் ரூ. 200 ஆக விற்கும் போது ரூ. 160 மட்டுமே நாம் கொடுப்போம்.
2. விலை ஏற ஏற நம் வசதி குறைகிறது: விலைவாசி ஏறும் போது நமக்குச் சம்பளம் உடனடியாக ஏறுவதில்லை. விற்பவருக்குத்தான் இலாபம், வாங்கும் நமக்கு பாரம்தான்.
2. விலை ஏற ஏற வசதியாகிறோம்: விலை ஏறும் போது, நமக்குத் தள்ளுபடியும், ஊக்கத்தொகையும் சதவிகிதத்தின் அடிப்படையில் இருப்பதால் வருமாணமும் அதிகரிக்கிறது.
3. விற்பனை வரி கூடுதல்: விலை ஏறினால், கூடுதல் விலைக்கும் சேர்த்து விற்பனை வரி வசுலிக்கப்படுகிறது.
3. விற்பனை வரி சற்று குறைவு: கொள்முதல் விலையின் மீதுதான் விற்பனை வரிப் போடப் படுவதால், விலை ஏறினாலும் விற்பனை வரி வெளி மார்கெட்டைக் காட்டிலும் சற்று குறைவாகவே இருக்கும்.
4. வருமானத்தைத் தாண்டிய விலைவாசி: நமக்கு எவ்வளவுதான் சம்பளம் உயர்ந்தாலும் விலைவாசி அதையும் தாண்டிதான் விலைவாசி இருக்கும். முந்தைய விலைவாசி விகிதத்தை கணக்கிட்டு மாதங்கள் பல கடந்தபின்தான் பிந்தைய சம்பளத்துடன் தருவார்கள். அப்போதைய விலைவாசி அதையும் தாண்டியதாக இருக்கும்.
4. விலைவாசியைத் தாண்டிய பன் மடங்கு வருமானம்: வலை பின்னல் வியாபார வருமானம் பெருக்க விகிதத்தில் இருப்பதால், நமது வருமானம் விலைவாசியைப் பல மடங்கு தாண்டியதாகவே இருக்கும்.
5. வாழ் நாள் முழுவதும் போராட்டம்: முப்பது வருடங்கள் நாம் விலைவாசியுடன் போராடிவிட்டு, பின் அடுத்த தலைமுறைக்கும் அதே போராட்டத்தை விட்டுச் செல்வோம்.
5. போராட்டம் 2 முதல் 5 வருடங்கள்தான்: வெற்றியாளரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் விலைவாசி போராட்டத்தில் இருந்து 2 முதல் 5 வருடங்களில் வெளிவந்துவிடலாம்.
விலைவாசியை வெல்லும் சூத்திரம் அறிந்தோம் !
விரைந்து செயலாற்றி விடுபடுவோம் விலைவாசியிலிருந்து !

செல்வச் செழிப்புக்கு மாறுவோம்


வாழ்வியல் நுட்பங்கள்
செல்வச் செழிப்புக்கு மாறுவோம்
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

என் இனிய நண்பர்களே! செல்வச் செழிப்பான வாழ்க்கைகு செல்வந்தர்கள் புத்தியைக் கொண்டு மென்மையாக உழைத்தார்கள் என்றும், கடுமையாக உழைத்தவர்கள் வறுமையைத்தான் கண்டார்கள் என்று பார்த்தோம். அதுமட்டும் அல்லாமல் செல்வந்தர்கள் தங்கள் தொழிலில் வெற்றியை பல சவால்களைச் சந்தித்துதான் பெற்றார்கள் என்பது தெரியும்தானே?. அப்படிப்பட்ட சவால்களில், மிக முக்கியமான ஒன்று, பெரும் பணத்தை முதலீடு செய்யது நஷ்டம் அடையாமல் போட்டி உலகில் வெற்றி காணும் சவாலாகும். நான் உங்களுக்கு இப்படிப்பட்ட சவால்களை எல்லாம் சந்திக்க கூப்பிடவில்லை. நாம் புத்தி கொண்டு மென்மையாக உழைப்பதோடு. ஒரு உத்தியையும் கொண்டு உழைக்க அழைக்கிறேன். அந்த உத்தி ஒரு நெம்புகோல் உத்தியாகும். ஒரு பெரும் பாறையை நெம்புகோல் கொண்டு சுலபமாக உந்தித்தள்ளுவது போல் நாமும் வறுமையை ஊதித்தள்ளி, செல்வச் செழிப்புக்கு மாறமுடியும். அந்த நெம்புகோல் வேறெதுவும் இல்லை, நெட் ஒர்க் மார்கெட்டிங்தான். ஆகா, நீங்களுமா இதற்கு வக்காளத்து வாங்குகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஒரு வெற்றிகரமான தொழிலதிபரையும் தாண்டி விரைவாக நீடித்த செல்வச் செழிப்பை உண்டாக்க முடியும் என்றால் அது நெட் ஒர்க் மார்கெட்டிங்கால்தான் முடியும். அது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
வெற்றிகரமான தொழிலதிபரின் சவால்கள்
அவற்றை நாம் வெற்றி கொள்ளும் வழிகள்
1. அதிக முதலீடு: ஆயிரங்களை சம்பாதிக்க இலட்சங்களையும், இலட்சங்களை சம்பாதிக்க கோடிகளையும் முதலீடாக போட வேண்டும்.
1. மிகக்குறைந்த முதலீடு: சில ஆயிரங்களைப் போட்டு பல இலட்சங்களையும் நம் இலட்சியங்களையும் அடையலாம்.
2. முழு நேரம் பிஸினஸ்: பிஸினஸ் நம் நேரத்தை முழுமையாக முழுங்கி விடும்.
2. பகுதி நேர பிஸினஸ்: தினமும் இரண்டு மணி நேரம் இதற்காக செலவழித்தால் போதும்.
3. போட்டி உண்டு: எத்தனைக் காலம் தொழிலை வெற்றிகரமாக செய்திருந்தாலும், போட்டியாளர்கள் அவரை ஜெயிக்காத வரைதான் நிலைக்கும்.
3. போட்டி இல்லை: உங்களை நம்பி வந்தவர்களை ஜெயிக்க உதவினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
4.பிஸினஸ்நடக்காவிட்டால் நஷ்டம்: வர்த்தகம் வெற்றிகரமாக நடைபெறாவிட்டால் நஷ்டம்தான் (கடை வாடகை, மின்சாரக் கட்டணம், வேலையாள் சம்பளம், விரைவாக அழியக்கூடிய பொருளாக இருந்தால் பொருள் நஷ்டம் முதலியன தவிற்க முடியாது)
4. பிஸினஸ் நடக்காவிட்டால் நஷ்டம் இல்லை: விரைவாக அழியக்கூடிய பொருட்கள் எதையும் கையாளாததால் விற்பனை நடைபெறாவிட்டாலும் நஷ்டம் இல்லை. மேலும் பொருட்கள் எதையும் இருப்பு (Stock) வைக்க வேண்டியதில்லை ஆகையால், கஷ்டமும் இல்லை.
5. தொழில் நடத்த இடம் வேண்டும்: பிரதானமான நகரப்பகுதியில் பிரதான தெருவில் வர்தக இடம் அமைந்தால்தான் வருமாணம் சிறக்கும்.
5. இடம் ஒரு பொருட்டல்ல: நம் வீடுதான் வர்த்தகம் நடக்கும் இடம். அது ஒரு குக்கிராமத்தில் கூட இருக்கலாம், வெற்றி காண முடியும்.
6.நிலையான வருமானம் நிச்சயம் இல்லை: எவ்வளவு நல்ல வருமானத்தை எட்டியிருந்தாலும், இந்த நிலை அப்படியே நிலைக்கும் என்று அருதியிட்டு கூற முடியாது. வருமான பாதுகாப்பு நிச்சயமாக இல்லை. வர்தக நிலமையோ வர்தகர் நிலமையோ பாதகமானால் வருமாணம் பாதிக்கும்.


6. நிலையான தொடர் வருமானம்: நமக்கான பிஸினஸ் அமைப்பை ஏற்படுத்திவிட்டபின் நிலையான வருமாணம் தலைமுறைக்கும் நிலைக்கும். காரணம், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் பொருட்களின் (Fast Moving Consumer Goods) உபயோகத்தைச் சார்ந்தும், குழுவின் பலம் சார்ந்தும் இருப்பதாலும் வருமாணம் நிலைத்துப் பெருகும்
7. முன் அனுபவம்அவசியம்: முன் அனுபவம் இல்லை என்றால், நஷ்டப்பட்டுதான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முன் அனுபவம் பெற்ற சக தொழில் அதிபர் எவரும் தொழில் முனைவோருக்கு கற்றுத் தருவதில்லை. நாமேதான் கற்றுத் தேர வேண்டும்.
7. மேலே உள்ளவரின் அனுபவ வழிகாட்டுதல்: முன் அனுபவம் இல்லாமல் வியாபாரத்தில் இறங்கலாம். இந்த வியாபாரத்தில் ஜெயித்தவர்களின் வெற்றி அனுபவ வழி காட்டுதலில், கற்றுக்கொண்டே படிப்படியாக முன்னேரலாம்.
8. ஆரோக்கியம் பாதிக்கப் படலாம்: அதிக முதலீடு போட்டிருப்பதாலும், போட்டி உலகில் போராடுவதாலும் இடைவிடாத மன உளைச்சலும் (Stress), அசராத உழைப்பால் உடல் தேய்மானமும் (Strain) கண்டிப்பாக உண்டு. இதை சரி செய்து கொள்ள தன் சம்பாத்தியத்தின் கணிசமான பங்கை தன் தொழில் அமைப்புக்கு வெளியே செலவு செய்து மீட்க வேண்டி வரும்.
8. ஆரோக்கியத்தை உள்ளடக்கியது: போடாத முதலீட்டை மீட்க வேண்டாததாலும், போட்டியே இல்லாததாலும் மன உளைச்சல் இல்லை. கூடுதல் உழைப்பால் ஏற்படும் உடல் தேய்மானத்தை ஈடு செய்யத் துணை உணவுப் பொருட்கள் (Food Supplements) இந்த அமைப்பிலேயே இருப்பதால் இதற்காகச் செய்யும் செலவும் விற்பனைக் கணக்காகி, லாபமும் ஆரோக்கியமும் கிடைக்கிற்து.
9. தலைமுறை வருமானம் இல்லை: தன் தொழிலைத்தான் தன் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியும், வருமானத்தை அல்ல.
9. தலைமுறை தொடர் வருமானம் உண்டு: தன் தொடர் வருமானத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றித்தர முடியும்.
10. நாம் நின்றால் வருமானம் நின்றுவிடும்: உடல் ஒத்துழைக்கும் வரையோ அல்லது ஓய்வு பெரும் வரையோ தொழில் செய்தாலும், நிறுத்திய உடன் வருமாணம் நின்று விடும்.
10. நாம் நின்றாலும் வருமானம் நிற்க்காது: வலைப் பின்னல் வியாபாரம் நம் முனைப்பையும் தாண்டி வளர்ந்து கொண்டே போவதால், தலைமுறைகளைத் தாண்டி நிற்கிறது.
11. வேலை ஆட்களுக்கு சம்பளம்: இலாபம் வந்தாலும் வராவிட்டாலும் வேலை ஆட்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும்.
11. அவர்களே சம்பாதித்து கொள்வார்கள்: நம் கீழ் வருபவர்கள் வேலை ஆட்கள் அல்ல, அவர்கள் நம் நண்பர்களாவார்கள். அவர்களுக்கு வழியும், உதவியும் செய்தால் அவர்களே சம்பாதித்து கொள்வார்கள்.
12. முப்பது வருடம் படாதபாடு: முப்பது வருடம் உழைத்துவிட்டு நிறுத்தினாலும், வருமானம் நின்று வசதி குறைந்துதான் போகிறோம். பின் இதற்கா இந்தப் பாடு?
12. இரண்டிலிருந்து ஐந்து வருடத்தில் ஓய்வு: வெற்றியாளர்களின் வழி காட்டுதலில் முறையாகச் செய்தால் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களில் நிலையான தொடர் வருமானத்தோடு ஓய்வாகலாம்.

வலைப் பின்னல் வியாபாரம், ஒரு அருமையான நெம்புகோல் !
வளமான மனத்துடன் செல்வச் செழிப்பை உண்டாக்குவோம் !