Search This Blog

Friday 26 August 2011


வாழ்வியல் நுட்பங்கள்
மூன்றும் பெற்றால் பெருவாழ்வு
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

என் இனிய நண்பர்களே! செழிப்பான, நிம்மதியான, அமைதியான, ஆனந்தமான வாழ்கைக்கு மூன்று முக்கியமான அம்சங்கள் தேவைப்படுகிறது. அந்த மூன்றையும் பெற்றால் பெருவாழ்வு அமையும். அவை முறையே, பணம், நேரம் மற்றும் வருமான பாதுகாப்பு. நம்மில், வெறும் மூன்று சதவிகிதத்தினர்தான் இந்த மூன்றையும் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். மற்ற 97 சதவிகித்த்தினர் ஒன்று அல்லது இரண்டையோ அல்லது மூன்றையுமே இழந்துதான் வாழ்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், மெஜாரிட்டி எப்போழுதும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லைதானே?. ஏன் என்றால் இந்த மூன்று சதத்தினர்தான் உலகம் மேம்படக் காரணமாக இருக்கிறார்கள். சரி, அந்த மூன்று சதத்தினர் அனுபவிக்கும் அந்த மூன்றையும் ஒன்றாகப் பெறுவது எப்படி என்று பார்ப்போமா?. அது பற்றித் தெரிந்து கொள்ளும் முன், நம் 97சதத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.


வருமான வழி
பணம்
வாழ நேரம்
வருமான பாதுகாப்பு
1. வேலை
(80%)
எவ்வளவுதான் சம்பளம் உயர்ந்தாலும் விலைவாசி அதைத் தாண்டியே இருப்பதால் பணப்பற்றாக்குறை இருக்கவே செய்யும்.
பணம் இல்லாவிட்டாலும் உபரி நேரம் அதிகம் இருக்கும். அதுகூட இல்லாதவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
நாம் பார்க்கும் வேலைக்கு வேண்டுமானால் பாதுகாப்பு இருக்கலாம், ஆனால், வருமான பாதுகாப்பு கிடையாது. நம்மால் வேலை செய்ய முடியாவிட்டால் வருமானம் இல்லை.
பணம் இல்லை
நேரம் உண்டு
பாதுகாப்பு இல்லை.
2. பெருந் தொழில்
(15%)
பெரும் பணம் கையில் புரளும், ஆனால், அதில் கடன் போக எவ்வளவு பணம் சொந்தப் பணம் என்பதுதான் முக்கியம்.
தொழில் போட்டியும், பெரும் பணம் முதலீட்டாக போட்டுள்ளதாலும் முழு நேரமும் தொழில் பற்றிய கவனமே அதிகம் இருக்கும். ஆகையால் வாழ்வதற்கு நேரம் இல்லை.
எவ்வளவு நல்ல வருமானத்தை எட்டியிருந்தாலும், இந்த நிலை அப்படியே நிலைக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது. வர்த்தக நிலமையோ அல்லது வர்தகர் நிலமையோ பாதகமானால் வருமானம் பாதிக்கும்.
பணம் உண்டு
நேரம் இல்லை
பாதுகாப்பு இல்லை
3. சுய தொழில்
(7%)
சுய திறமையின் பலனாய் சுய தொழில் பார்க்கும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்டவர்களுக்கு பணம் நிறைய கொட்டும்தானே? .
பெரும் தொழில் செய்பவர்களைவிட சுய தொழில் புரிபவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. காரணம், தொழில் முழுமையாக அவரை மட்டுமேச் சார்ந்து இருப்பதால்தான்.
தனக்கோ தன் சுய திறமைக்கோ பங்கம் வந்தால் வருமானம் நின்றுவிடும். உதாரணமாக, அறுவை சிகிச்சை நிபுணர்க்கு விபத்தில் விரல் போனால், அவரின் வருமானம் நின்றுவிடும்தானே?.
பணம் உண்டு
நேரம் இல்லை
பாதுகாப்பு இல்லை

என்ன நண்பர்களே! இந்த மூன்று வகையான நபர்களுக்கும் மூன்றில் ஒன்றுதான் கிடைக்கிறது என்பது புரிகிறதா?. ஆக, இந்த மூன்றும் கிடைக்கும் நபர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?. அவர்கள் வேறு யாரும் இல்லை, தலைமுறை வருமானம் (Royalty Income) பெறுபவர்கள்தான். ராயல்டி என்பது ஒரு முறை செய்த செயலுக்குத் தலைமுறைக்கும் வருமானம் பெறுவதாகும். இதற்கு, நீங்கள் ஏதேனும் புதிதாக கண்டுபிடிக்க வேண்டும், அல்லது நீங்கள் ஒரு பாடகராகவோ, இசை அமைப்பவராகவோ, புத்தகம் எழுதுபவராகவோ இருந்து, உங்கள் படைப்பு பலரால் விரும்பி வாங்கப்படுமானால் உங்களுக்கு ராயல்டி கிடைக்கும். இதற்கெல்லாம் சாத்தியம் இல்லை என்றால் வலைப் பின்னல் வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றால் உங்களுக்கும் இராயல்டி கிடைக்கும். ஆக, இப்படி ராயல்டி பெறும் வருமானத்தில்தான் வாழ்வதற்கு தேவையான பணம்,வாழ நேரம் மற்றும் வருமான பாதுகாப்பும் கிடைக்கிறது. அதன் விளக்கத்தை இப்பொழுது பார்ப்போமா?.

வருமான வழி
பணம்
வாழ நேரம்
வருமான பாதுகாப்பு
வலை பின்னல் வியாபாரம்
நமது குழுவில் ஐநூறு பேர் இருக்கும் போது, ஒவ்வொருவரும் சுமார் ஆயிரம் ருபாய்க்கு தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதாக வைத்துக் கொண்டால் கூட நமக்கு ஐந்பதாயிரமாவது கிடைக்கும்.
நமக்கான வலை பின்னல் வியாபாரத்தை ஏற்படுத்திவிட்டால், நம் முனைப்பையும் தாண்டி வளர்ந்து கொண்டே போவதால், நாம் உழைக்கும் நேரம் மிச்சம் ஆகிறது ஆகையால் நமக்கு வாழ நேரம் கிடைக்கிறது.
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் பொருட்களின் (Fast Moving Consumer Goods - FMCG) உபயோகத்தைச் சார்ந்தும், குழுவின் பலம் சார்ந்தும் இருப்பதால் தலைமுறைக்கும் வருமானம் நிலைத்துப் பெருகும்.
பணம் உண்டு
நேரம் உண்டு
பாதுகாப்பு உண்டு
வலைப் பின்னல் வியாபாரம் மூலம் வாழப் போதுமான பணமும்,
குடும்பத்தோடு வாழ நேரமும், வருமான பாதுகாப்பும் கிடைக்கும்.

No comments:

Post a Comment